டெல்லி: நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1.52 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளதுடன்,  3,128 பேர் உயிரிழந்துழள்ளனர். அதே வேளையில்  2,38,022 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள தகவலின்படி,   இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,734 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,80,47,534 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பலனிறி,  3,128 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால்  உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 3,29,100 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2,38,022 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,56,92,342 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தற்போது  20,26,092 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 21,31,54,129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.