டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 11,903 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3.43 கோடியை தாண்டி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையுடன் கூடிய கொரோனா தொற்றின் நிலவரம் குறித்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 11,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.   இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,08,140 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி  மேலும் 311 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,59,191 ஆக  அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளல் மேலும்  14,159 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,83,581 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,51,209  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 41,16,230 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,07,29,66,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.