வாஷிங்டன்

மீண்டும் பாகிஸ்தானுடன் வர்த்தகப் பேச்சு நடந்ததாக வரும் செய்திகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில்  ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில பங்கேற்றார்

அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாலர்கலிடம்

“பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை  கடந்த ஆண்டுக்கு பிறகு, பாகிஸ்தானுடன் வர்த்தகம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்தியா, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை ஒருபோதும் நிறுத்தவில்லை, மேலும் இது தொடர்பான முடிவு 2019 இல் பாகிஸ்தான் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே, இந்தியா மிகவும் விருப்பமான நாடு என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதே எங்கள் ஆர்வமாக இருந்தது. பாகிஸ்தானுக்கு நாங்கள் அந்த அந்தஸ்தை வழங்கி வந்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு அதே அந்தஸ்தை வழங்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அதன் அரசியலமைப்பின் 370வது பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இம்ரான் கான் தலைமையிலான அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம், ஆகஸ்ட் 2019 இல் அனைத்து இருதரப்பு வர்த்தகத்தையும் நிறுத்தி வைத்தது”

எனத் தெரிவித்துள்ளார்.