டெல்லி: பிரான்சில் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.   இதில்,  88 ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் அடங்கும். இவற்றுல்,  96 விமானங்கள் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில், 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அடுத்த வாரம் இந்தியா வருகை தர உள்ள நிலையில், அவரது  வருகைக்கு முன்னதாக 114 ரஃபேல் ஜெட் விமானங்களை 39 பில்லியன் டாலர்களுக்கு வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது சுமார் ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான இந்த மெகா ஒப்பந்தத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கி உள்ளது.

புதிதாக வாங்கப்பட உள்ள மொத்தம் 114 விமானங்களில், 88 ஒற்றை இருக்கை கொண்டவை, 26 இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் ஆகும். 18 விமானங்கள் பிரான்ஸிலிருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. இந்த விமானங்களில் 30% முதல் 60% வரை இந்தியத் தயாரிப்பு பாகங்கள் மற்றும் ஆயுதங்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது ரபேல் விமானங்கள் காட்டிய அபார செயல்திறன் மற்றும் சீனாவின் ஏவுகணைகளை முறியடித்த விதம் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தத் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கான இறுதி அங்கீகாரத்தை வழங்கும்.

மேலும், பிப்ரவரி 19-20 தேதிகளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வரும்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.

[youtube-feed feed=1]