டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,03,908 ஆக உயர்ந்து 1,40,994 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 26,201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 97,03,908 ஆகி உள்ளது.  நேற்று 384 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,40,994 ஆகி உள்ளது.  நேற்று 38,621 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 91,77,645 ஆகி உள்ளது.  தற்போது 3,82,855 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,075 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,55,341 ஆகி உள்ளது  நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 47,774 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,345 பேர் குணமடைந்து மொத்தம் 17,30,715 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 76,767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 998 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,94,004 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,867 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,601 பேர் குணமடைந்து மொத்தம் 8,57,351 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 316 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,72,288 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,038 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 595 பேர் குணமடைந்து மொத்தம் 8,59,624 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,626 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,312 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,91,552 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,809 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,639 பேர் குணமடைந்து மொத்தம் 7,69,048 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,272 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,39,665 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,442 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,705 பேர் குணமடைந்து மொத்தம் 5,77,616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.