மாஸ்கோ :

ஷிய சட்டவிதிகளை மீறியதாக  ‘கூகுள்’ நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.54 லட்சம் அபராதம் விதித்துள்ளது ரஷ்ய அரசாங்கம்.

ரஷியா அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அதன்படி, ‘கூகுள்’ உள்பட வலைதளங்கள் உபயோகப்படுத்தும்  தேடுபொறிகளில் (Search engine)  சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

ஆனால, ரஷ்ய சட்ட விதிகளை கூகுள் நிறுவனம் மதிக்கவில்லை என்றும், சட்ட விதிகளை பின்பற்றி தடை செய்யப்பட்ட தளங்களை தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சட்ட விதிகளை மீறிய குற்றத்துக்காக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.54 லட்சத்து 21 ஆயிரத்து 80) அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த அபராத தொகையை ‘கூகுள்’ நிறுவனம் செலுத்தி விட்டதாக ரஷிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

: