40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா இசையமைத்து வந்தார்.

அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்க இருப்பதாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இளையராஜாவை காலி செய்யச் சொன்னது. இதனை எதிர்த்து இளையராஜா நீதிமன்றம் வரை சென்றார்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் புதிதாக ஒரு இடத்தை வாங்கி ஸ்டூடியோ கட்டும் பணிகளை இளையராஜா தொடங்கினார்.

மேலும் விஜய் சேதுபதி வெற்றிமாறன் ஆகியோர் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவுக்கு இன்று வருகை தந்தனர். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்துக்கு இசையமைக்கும் பணிகளை இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் இன்று தொடங்கினார்.