டெல்லி

ன்னும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை காலை இந்தியப் பாதுகாப்புப் படை அதிரடியாகத் தாக்குதல் நடத்திபாகிஸ்தான் பாகிஸ்தானில் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்ததில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த ஆபரேஷன் சிந்தூர வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை முறியடித்த இந்தியா அதற்குச் சரியான பதிலடியைக் கொடுத்தது. இந்தியாவின் பதிலடியைத் தாங்க முடியாத பாகிஸ்தான் மோதல் வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்ததால் இந்தியா அதை ஏற்றுக்கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்திய விமானப்படை தனது ட்விட்டரில்

”ஆபரேஷன் சிந்தூரில் நமக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுகிறோம்.

தேசிய நோக்கங்களுடன் இணைந்து, வேண்டுமென்றே மற்றும் விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், சரியான நேரத்தில் விரிவான விளக்கவுரை நடத்தப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு IAF அனைவரையும் கேட்டுக்கொள்கிறது”

என்று பதிவிட்டுள்ளது.