டில்லி

ரணமடைந்த வீரரின் மனைவியும் ராணுவ அதிகாரியுமான ஒரு பெண் தனது 5 நாள் குழந்தையுடன் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்திய விமானப்படையில் பணி புரியும் ராணுவ கமாண்டர் துஷ்யந்த் வாட்ஸ்.   இவரது மனைவியும் குமுத் தோக்ராவும் ராணூவத்தில் மேஜராக பணி புரிபவர்.   துஷ்யந்த் கடந்த 15 ஆம் தேதி அன்று மஜூலியில் விமானப்படை ஹெலிகாப்டரில் பறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தார்.   துஷ்யந்த் மரணமடைந்த போது அவர் மனைவி மேஜர் குமுத் தோக்ராவுக்கு பெண் குழந்தை பிறந்து 5 நாட்கள் ஆகி இருந்தது.    கமாண்டர் அந்தக் குழந்தையை பார்க்காமலே மரணம் அடைந்துள்ளார்.

இதனால் கடும் துயருற்ற போதும் குமுத் தோக்ரா மனம் தளரவில்லை.   தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ராணூவ உடையுடன் தனது பச்சிளம் குழந்தையை சுமந்தபடி  கலந்துக் கொண்டுள்ளார்.   இந்த வீரமங்கையின் செய்தியை அறிந்து பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.    இந்த செய்தி வைரலாகி பலராலும் டிவிட்டரில் முகநூலிலும் பதியப்பட்டு வருகிறது.