சென்னை: பாமகவில்  மீண்டும் இணையமாட்டேன், என்றும், தவெக தலைவர்  விஜய் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் என தவாக தலைவர் வேல்முருகன் கூறினார்.

பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கிடையே, தவாக தலைவர் வேல்முருகனின் சகோதரர் பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியது. திமுக மீது அதிருப்தியில் இருந்து வரும் வேல்முருகன் மீண்டும் பாமகவில்  இணைய இருப்பதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில்,   கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் , தமிழக உரிமைகள், தமிழ்த்தேசிய அரசியலை தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து முன்னெடுக்கு பாமகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு காரணமாக,  ஆறுதலை தெரிவிக்கவே எனது சகோதரர் ராமதாஸை சந்தித்தார். இதில் எந்த அரசியலும் இல்லை என்று கூறியதுடன்,  ராமதாஸ்- அன்புமணி மோதலால் ஏற்பட்டுள்ள நிலை கவலை அளிக்கிறது என்றார்.

நான் பா.ம.கவில்  இணைய உள்ளதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.  நான் ஒருபோதும் பா.ம.க.வில்  இணையமாட்டேன் என்றார்.

பின்னர் தவெக மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் குறித்து விமர்சித்தவர்,   விஜய் நிகழ்ச்சி குறித்து தான் சொல்லாததை திரித்து கூறுகிறார்கள். மாணவர்களுடன் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியை நான் கொச்சைப்படுத்தி பேசியதாக வதந்தி பரப்பப்படுகிறது என்று கூறியவர்,  பெற்றோர் முன்னிலையில் ஒரு நடிகரை மாணவிகள் கட்டிப்பிடிப்பது தமிழ் கலாச்சாரம் அல்ல என்பதையே தான் தெரிவித்தார். சினிமாக்காரர்களிடம் பிள்ளைகள் அதிக உரிமை எடுக்க பெற்றோர் அனுமதிக்க கூடாது என்று கூறினேன்.

காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல  காமராஜரோடு விஜயை ஒப்பிடுவதை ஏற்க முடியாது, கலையை கலையாக பார்க்காமல், நடிகரை தூக்கி வைத்து கொண்டாடுவது வருந்தத்தக்கது என்று கூறிய வேல்முருகன் ,விஜய் தமிழராக அரசியலுக்கு வருவதில் தவறில்லை, ஆனால் வந்தவுடனேயே முதலமைச்சர் கனவுடன் வரக்கூடாது என்றும்,  விஜயின் அரசியல் வருகைக்கு நான்  ஒரு போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை , அவருக்கு வாழ்த்து கூறினேன் என்றார்.

நான் கூறிய கருத்து குறித்து,   தவெக தொண்டர்கள் என்னை மிரட்டுவதெல்லாம் வேண்டாம், அனைத்தையும் பார்த்துவிட்டு வந்தவன் நான் என பதிலடி கொடுத்த வேல்முருகன்,   மக்களுக்காக களத்திற்கு வராதவர் விஜய் என்றும் சாடினார்.