கொல்கத்தா: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இன்று வீடு திரும்பிய பிசிசிஐ தலைவர் கங்குலி, தான் முற்றிலும் நலமாய் உணர்வதாக தெரிவித்துள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிசிசிஐ தலைவர் கங்குலி. அரசியல்ரீதியாக அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

அவர் நடித்த அதானி நிறுவன விளம்பரம்கூட நிறுத்தப்பட்டது. கங்குலியின் இந்த நிலைக்கு, பாரதீய ஜனதாவே காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் செளரவ் கங்குலி. அவர் கூறியுள்ளதாவது, “நான் இப்போது முழு நலமாக உணர்கிறேன். மருத்துவமனையில் எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் விரைவில் பறப்பதற்கும் தயாராகி விடுவேன் என்று நம்புகிறேன்” என்றுள்ளார் கங்குலி.