புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் தான்தான் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில்  உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தோ்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக,அதிமுக, பாமக ஆகிய கட்சிகளும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளும் களம் காண்கின்றன.

புதுச்சேரியில் மீண்டும் யாருக்கு அரியணை வாய்ப்பு என்று வெளியான கருத்து கணிப்புகளில் தேசிய ஜனநாயக  கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் புதுச்சேரி மாநிலத்துக்கு முதல்வர் தான்தான் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதுச்சேரி முதல்வர் நான்தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். மக்கள் வாழ்க்கை நிலையை உயர்த்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியமைக்க வாக்களிக்க வேண்டும். புதுச்சேரியை காப்பாற்ற நல்ல கூட்டணி வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன்  கூட்டணி வைத்துள்ளேன் என்று கூறினார்.