ண்டன்

தராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் லண்டனில் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத் ராம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்) படிக்கக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் சென்றார். லண்டனில் தேஜஸ்வினி தனது தோழி அகிலா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். பிரேசிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அவரது தோழியுடன் ஒரு வாரம் முன்பு இந்த வீட்டில் வந்து தங்கியுள்ளார்.

2 மாதங்களுக்கு முன் பட்ட மேற்படிப்பை முடித்த தேஜஸ்வினி லண்டனில் வேலை தேடிக் கொண்டிருந்தார். கடந்த 13-ம் தேதி காலை 10 மணியளவில், சமையல் அறையில் தேஜஸ்வினியும், அகிலாவும் சமைத்துக் கொண்டிருந்தனர்.  அப்போதுபோதைக்கு அடிமையான பிரேசில் இளைஞர் தேஜஸ்வினியிடம் பணம் பறிக்க முயன்றுள்ளார்.

தேஜஸ்வினி பணம் கொடுக்க மறுத்தபோது, பிரேசில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தடுக்க வந்த அகிலாவுக்கும் கத்தி குத்து காயம் ஏற்பட்டது. வடக்கு லண்டன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்ததில், தேஜஸ்வினி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க அகிலா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

உடனடியாக அகிலாவை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி பிரேசில் குற்றவாளியையும், அவரது தோழியையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் தேஜஸ்வினி கொலை சம்பவத்தால், ஐதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தார் மிகவும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இன்னம் ஓரிரு நாட்களில் தேஜஸ்வினியின் உடல் ஹைதராபாத் வரும் என அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.