• ஜூலை 29 (July 29) கிரிகோரியன் ஆண்டின் 210 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 211 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன.
  • musolini

நிகழ்வுகள்

  • 1014 – பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான்.
  • 1030 – டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் சமரில் ஈடுபட்டு இறந்தான்.
  • 1567 – முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
  • 1830 – பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.
  • 1848 – அயர்லாந்தில் “டிப்பெரரி” என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.
  • 1851 – 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1899 – முதலாவது ஹேக் ஒப்பந்தம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
  • 1900 – இத்தாலியில், முதலாம் உம்பேர்ட்டோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.
  • 1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
  • 1921 – ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார்.
  • 1944 – இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1948 – இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின.
  • 1957 – அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1959 – ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது.
  • 1967 – வியட்நாம் போர்: வடக்கு வியட்நாமியக் கரையில் ஃபொரெஸ்டல்” என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தீப்பிடித்ததில் 134 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1967 – வெனிசுவேலா நாட்டின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் அங்கு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1981 – வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் – டயானா திருமணம் நடைபெற்றது.
  • 1987 – ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சிய பிரதமர் மார்கரட் தாட்சர், மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
  • 1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
  • 1987 – இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
  • 1999 – இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
  • 2005 – ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

  • 1883 – முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945)
  • 1904 – ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1993)
  • 1905 – டாக் ஹமாஷெல்ட், ஐக்கிய நாடுகள் அவையின் 2வது பொதுச் செயலர் (இ. 1961)

இறப்புகள்

  • 1913 – டோபியாஸ் மைக்கல் ஆசர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1838)
  • 1974 – கருமுத்து தியாகராஜன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)
  • 1999 – நீலன் திருச்செல்வம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதி
  • 2009 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
  • 2009 – ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (பி. 1954)
  • 2014 – ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
  • 2014 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)

சிறப்பு நாள்

  • ருமேனியா – தேசிய கீத நாள்
  • சர்வதேச புலிகள் காப்பக தினம்

வெளி இணைப்புகள்

  • பிபிசி: இந்த நாளில்
  • நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
  • கனடா இந்த நாளில்