டோக்கியோ:
ணுஆயுதமில்லாத உலகத்தை உருவாக்குவோம் என ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்து உள்ளார்.

முதன் முதலாக  அமெரிக்காவினால் அணுகுண்டு வீசப்பட்ட  ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாசி  பகுதியில் இன்றும், அணுக்கதிர்களின் பாதிப்புகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.
அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் லட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள்.
download (1)
இதன் 71–வது ஆண்டு நினைவுதினம் இன்று (6–ந்தேதி) முதல் 9–ந்தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.   இதையொட்டி அணுகுண்டு வீசப்பட்ட பகுதியான  ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
download
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய நேரமான காலை 8.15 மணிக்கு அமைதி மணி ஒலிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று அணுகுண்டு தாக்குதலில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.
ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவு சதுக்கத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் திரண்டிருந்த மக்களிடையே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மேயர் கசுமி மத்சுயி ஆகியோர் பேசினர்.
images
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியதை போல் அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க உலக நாடுகளின் தலைவர்கள் முன்வரவேண்டும், அதற்கான முதல் படியை இன்று எடுத்து வைப்போம் என்று கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மே மாதம் ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் பயணம் மேற்கொண்டபோது அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க வேண்டும் என உலக நாடுகளை கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.