சென்னை

னி ஒரே நேரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாகும் என கல்லூரி இயக்குநர் அறிவித்துள்ளார்.

இன்று கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் ஒரு அறிக்கை வெலியிட்டுளார்

அந்த அறிக்கையில்.

”வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்.

ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் துவங்கும்.

செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

டிசமர்பர் 16ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளுக்குமான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும்”

என்று கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.