டெல்லி
ஹேமமாலினி கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் மிகைப்படுத்தப்படுவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் 29 ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டதில் 30 பேர் உயிரிழந்து 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று மகா கும்பமேளா கூட்ட நெரிசல் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசப்பட்டதுது.
இந்தநிலையில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரிய சம்பவம் அல்ல, அது மிகைப்படுத்தப்படுகிறது என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேம மாலினி கூறியுள்ளார்.
நடிகையும் பாஜ எம் பி யுமான ஹே,மமாலினி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம்.
”நாங்கள் கும்பமேளாவுக்குச் சென்றிருந்தோம். நாங்கள் நன்றாக நீராடினோம். எல்லாம் நன்றாக நிர்வகிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகப் பெரிய சம்பவம் கிடையாது. அது மிகைப்படுத்தப்படுகிறது. கும்பமேளாவிற்கு இவ்வளவு பேர் வருகிறார்கள், அதை நிர்வகிப்பது மிகவும் கடினம்”
நெரிசல் ஏற்பட்டதில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு மறைத்து வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். , அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள். தவறான விஷயங்களைச் சொல்வது அவர்களின் வேலை”
என்று கூறினார்.