சென்னை: எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக உள்ளது. ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டு விட்டதுபோன்ற நிலை காணப்படுகிறது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப் பானர்ஜி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, தமிழக அரசு சார்பில், விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கணக்கில் 19 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் இருப்பிலிருந்து, சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், பிற 14 மாநகராட்சிகளுக்கு 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளதா என அரசு இதற்கு பதில் தெரிவித்த  அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம்,  கேள்வி எழுப்பபியதுடன், வெளியில் நிலவும் நடைமுறைகளை பார்க்கும்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போல பொதுமக்கள் நடந்துகொள்வது தெரிகிறது என்றனர். அரசு, ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்ககியது. ஆனால், மக்கள் நடமாட்டத்தைப் பார்க்கும்போது,  ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போல  தெரிகிறது.  இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை எனவும் எச்சரித்தனர்.

அதற்கு பதில் அளித்த  அரசு தலைமை வழக்கறிஞர், கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், கடுமைகாட்ட வேண்டாம் என தற்போது காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை  பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டது வெளியில் வருவதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து கூறிய நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை அரசு தடுக்க வேண்டுமெனவும், மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதை  மக்கள் உணரும் வகையிலும், வெளியில் சுற்றித்தியக்கூடாது எனவும் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என அரசுக்கு அறிவுரை கூறினர்.

 

[youtube-feed feed=1]