சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில்  நடைபெற்ற  ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது,  ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்   என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் எவை?  என்ற பட்டியல் அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார.

இந்​தியா முழு​வதும் ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் என்​பது வரும் 22-ம் தேதி அமல்​படுத்​தப்பட உள்​ளது. இதனால் பல்​வேறு பொருட்​களின் விலை குறைய இருக்​கின்​றன. இதையொட்டி தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கான ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 புத்​தகத்தை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், சென்​னை​யில் வெளி​யிட்​டார்.

சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில் வா்த்தகம் மற்றும் தொழில்கள் அமைப்புகள் அடங்கிய கூட்டுக் கூட்டம் சென்னையில் செப்டம்பர் 14ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நநடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசியவர்,   ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு நாட்டில் (வாட், கலால் வரி உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரிகள்) சுமாா் 65 லட்சம் போ் வரி செலுத்தினா். ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக உயா்ந்தது.

ஆனால், சிலா் இதைக் கடுமையான வரி என்று வா்ணித்தனா். கடுமையான வரியென்றால் வரி செலுத்தியவா்கள் எண்ணிக்கை எப்படி உயா்ந்திருக்க முடியும்? இப்போது வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறை கூறியவா்கள் இப்போது ஏன் வாயை திறப்பதில்லை?.

ஜிஎஸ்டியில் இருந்து வந்த  நான்கு அடுக்கு வரி விகிதம் இப்போது 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்கு விகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 18 சதவீதமாக இருந்த 90 சதவீத பொருள்களுக்கு 5 சதவீத வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மொத்தம் 350 பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

, ரூ.6 லட்​சம் மதிப்​புள்ள புதிய டிராக்​டருக்கு ரூ.42 ஆயிரம் வரை சேமிக்க முடி​யும். டிராக்​டர் டயர்​கள் மற்​றும் உதிரி பாகங்​களுக்​கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீத​மாக குறைக்கப்​பட்​டுள்​ளது. இதனால் ரூ.50 ஆயிரம் மதிப்​புள்ள டிராக்​டர் டயர்களின் விலை​யில் ரூ.6,500 குறைந்துள்​ளது.

காஞ்​சிபுரம் பட்​டு, மதுரை சுங்​குடி துணி​களுக்கு 12 சதவீதத்​தில் இருந்து 5 சதவீத​மாக ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல் தஞ்​சாவூர் பொம்​மை​கள், காஞ்​சிபுரம் கைவினை பைகள், பவானி ஜமக்​காளம், சுவாமிமலை வெண்கல சின்​னங்​கள், மணப்​பாறை முறுக்​கு, தென்னை நார் பொருட்​கள் ஆகிய​வற்​றுக்​கும் 5 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டிருக்​கிறது.

மேலும் பரோட்​டா, ரொட்​டி, சப்​பாத்தி போன்ற உணவு பொருட்​களுக்கு வரி​விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ள​தால் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவு குறை​யும் என்​றும் எதிர்​பார்க்​கலாம்.

தமிழக பள்​ளி​களில் பயின்று வரும் 1.5 கோடி குழந்​தைகள் பயனடை​யும் வகை​யில் குறிப்​பேடு​கள், ரப்​பர், பென்​சில், கிரெ​யான்ஸ் போன்​றவற்​றில் ரூ.850 வரை பெற்​றோ​ரால் இனி சேமிக்க முடி​யும். அதே​போல் ரூ.1,000 மதிப்​பிலான மருந்​துகளுக்கு ரூ.100 வரை ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக புற்​று​நோய்​களுக்​கான மருந்​துகளுக்கு ரூ.1200 வரை விலை குறை​கிறது. கட்​டு​மானத் தொழில்​களில் ரூ.50 ஆயிரம் மதிப்​பிலான சிமென்ட் கொள்​முதலில் ரூ.5 ஆயிரம் வரை சேமிக்கலாம்.

ரூ.1 லட்​சம் மதிப்​பிலான இருசக்கர வாக​னங்​களுக்கு ரூ.10 ஆயிரம் வரை​யும், ரூ.6 லட்​சம் மதிப்​பிலான சிறிய ரக கார்​களுக்கு ரூ.60 ஆயிரம் வரை​யும், ரூ.3 லட்​சம் மதிப்​பிலான ஆட்​டோக்​களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் பிரதமரின் வீட்​டு​வசதி திட்​டத்​தின்​கீழ் கட்​டப்​படும் வீடு​களுக்கு இது நேரடி​யாக பயனளிக்​கும். குறிப்​பாக ரூ.40 ஆயிரம் மதிப்​பிலான தொலைக்​காட்சி பெட்​டிகளுக்கு ரூ.4 ஆயிரம் வரை​யும், ரூ.35 ஆயிரம் மதிப்​பிலான ஏசி-​களுக்கு ரூ.3,500 வரை​யும் ரூ.60 ஆயிரம் மதிப்​பிலான ஹீட்​டருக்கு ரூ.7 ஆயிரம்​ வரை​யிலும்​ விலை குறை​யும். இ

ஜிஎஸ்டி மூலம் தற்போது சுமாா் ரூ.22 லட்சம் கோடி ஆண்டுக்கு வருவாய் வருகிறது. இதில் பாதியளவு மாநில அரசுகளுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி சீா்திருத்தத்தில், வசூலிக்கப்பட்ட வரியை திருப்பிச் செலுத்துவதும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, இந்திய தொழிலக கூட்டமைப்பு தமிழக தலைவா் உன்னிகிருஷ்ணன், ஜவுளித் தொழில் சங்கங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பிரதிநிதி ஏ.சக்திவேல், ஹிந்துஸ்தான் சேம்பா் வி.சந்திரகுமாா், தமிழக வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் விக்கிரமராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.