திரைப்பட துறையினருக்கு ஆஸ்கர் விருது போல் இசை துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஜனவரி 31 ம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள க்ரிப்டோ.காம் என்ற அரங்கில் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி ஏப்ரல் 3 அன்று லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம். கிராண்ட் கார்டன் ஏரினா அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ம் ஆண்டும் 31 ஜனவரி-க்கு பதில் மார்ச் 14 ம் தேதி தான் கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடக்காமல் தள்ளிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.