டெல்லி:
ந்தியாவில் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும் உத்தரவு (work from home), இந்த மாத இறுதியுடன் முடிவடைய் இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு கூறி உள்ளது.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  6 முறை ஊரடங்க நீட்டிக்கப்பட்டு, ஜூலை 31ந்தேதியுடன் முடிவடையும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், தொற்று பரவல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மேலும் தீவிரமடைந்து உள்ளதால், தளர்வுகளுடனான ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டால், ஐடி, பிபிஓ போன்ற தகவல் நுட்ப பணியில் உள்ள லட்சக்கணக்கான   ஊழியர்கள், வீடுகளில் இருந்தே பணியாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்படி சுமார் 20 சதவிகித பணியாளர்கள் மட்டுமே அலுவலகம் சென்று வருகிறார்கள். மீதமுள்ள 80 சதவிகித ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில்  சமீபத்தில் அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன், வீடியோ கான்பிரன்சிங் மூலம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்தியாவிலும் ஐடி ஊழியர்கள் டிசம்பர் 31ந்தேதி வரை வொர்க் ஃப்ரம் ஹோம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான இணைப்பு விதிமுறைகளை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசாங்கம் நேற்று இரவு அறிவிப்பு (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளது.
“கொரோனா பரவலை  கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து வேலை செய்ய வசதியாக 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பிற சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தளர்த்தல்களை டிஓடி மேலும் நீட்டித்துள்ளது” என்று தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள டிவிட் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 11.55 லட்சத்தை தாண்டி 28,084 பேர் செவ்வாய்க்கிழமை வரை உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.