சென்னை’
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது/

அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த பன்னீர்செல்வம். சில காரணங்களுக்காக பணியிட நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு அவர் நீதிமன்றத்துக்கு சென்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.
ஆனால் அவருக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.ந்ப் பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு நிலுவைத் தொகை ரூ.11 லட்சத்தை தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரையிலும் அந்த பணத்தை பன்னீர்செல்வத்துக்கு வழங்கவ்ல்லை.
எனவே வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தை ஜப்தி செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில் கோயம்பேட்டிலிருந்து பெங்களூரு செல்லும் அரசு சொகுசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர். அந்த அரசு பேருந்தில் இருந்த பயணிகள் சாலையில் இறங்கிவிடப்பட்டு வேறு பஸ்களில் ஏறி சென்றனர்.”