சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போருது,  ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்து உள்ளது.

அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்து வந்தனர் செந்தில் பாலாஜி. இவர்   விருதுநகா் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்த எஸ்.ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவின் கிளை மேலாளர் வேலை பெற்றுத் தர ரூ. 30 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில்,   முன்னாள் பால்வளத் துறை ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோா் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடர்பாக, திமு கஅரசு பதவி ஏற்றதும்,   தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை  கர்நாடக மாநிலத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

இதுதொடர்பான காவல்துறையின் விசாரணையில்,   ராஜேந்திர பாலாஜி சுமாா் 33 பேரிடம் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் கடந்த ஜன.9-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மொழிபெயா்க்கப்பட்ட ஆவணங்களை இரண்டு வாரங்களுக்குள் ஆளுநர் செயலகத்திற்கு வழங்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்ட உச்சநீதிமன்றம், நிலுவையில் உள்ள அனுமதி குறித்து விரைவான முடிவை எடுக்க ஆளுநர் அலுவலகத்திற்கும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓரிரு நாள்களில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.