சென்னை

ரும் 19 ஆம் தேதி பிருத்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் ஓடிடியில் வெளியாகிறது.

பிரபல மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தை பிளஸ்சி இயக்கியுள்ளார் பிருத்விராஜ் கதாநாயகனாகவும் அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.

கடந்த மார்ச் 28 ஆம் தேதி இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில்  /வெளியானது. முதல் நாளிலேயே ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் ல் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்து, மிகப்பெரிய தொடக்கத்தை பெற்றது.

படம் வெளியாகி 9 நாட்களில் ரூ.100 கோடி என்ற இலக்கை எட்டி தற்போதுவரை இப்படம் ரூ.157 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. வரும் 19 ஆம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் பிருத்விராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.