பாரீஸ்:

ற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகாரிகள் சரியாக நிர்வகிக்கத் தவறினால் உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மூன்று உலகளாவிய அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள உணவு கிடைப்பது குறித்த நிச்சயமற்ற தன்மை உலக சந்தையில் பற்றாக்குறையை உருவாக்கும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைவர் கியூ டோங்யூ, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ராபர்டோ அசெவெடோ ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்ட அறிக்கைகை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்குகளுக்கு மத்தியில் குறிப்பாக உணவு பற்றாக்குறை அதிகரிக்காமல் இருக்க, முடிந்தவரை சுதந்திரமாக வர்த்தகம் செய்ய ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டும் அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.

தங்கள் குடிமக்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க செயல்படும்போது, வர்த்தக தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளும் உணவு விநியோகச் சங்கிலியை சீர்குலைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறினர்.

விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காதது மற்றும் சந்தைகளுக்கு உணவைப் பெற இயலாமை காரணமாக நீண்ட கால ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விவசாய உற்பத்தியில் இடையூறுகளை ஏற்படுத்தும் விவசாய மற்றும் உணவுத் தொழிலாளர்களின் இயக்கத்திற்கு இடையூறு விளைவித்தல் மற்றும் உணவு பொருட்களுக்கான எல்லை கட்டுப்பாட்டை நீட்டித்தல் உள்ளிட்ட இடையூறுகள் விளைவாக அழிந்துபோகக்கூடியவை கெட்டுப்போவதற்கும், உணவுக் கழிவுகளை அதிகரிப்பதற்கும் காரணமாகின்றன என்று மூன்று தலைவர்கள் தெரிவித்தனர்.

உணவு உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை அவர்களின் சொந்த ஆரோக்கியத்துக்காகவும் மற்றவர்களின் ஆரோக்கியத்துக்காகவும் பாதுகாக்க வேண்டும், அத்துடன் உணவு விநியோக சங்கிலிகளை பராமரிக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இது போன்ற சமயங்களில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம், கொரோனாவுக்கான நடவடிக்கை தற்செயலாக அத்தியாவசிய பொருட்களின் தேவையற்ற பற்றாக்குறையை உருவாக்காது மற்றும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை அதிகரிக்காது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.