சென்னை: முதல்வர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை திரும்பபெற உயர்நீதிமன்ற ஒப்புதலை பெறுங்கள் என  சிறப்பு நீதிமன்றம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக செயல்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட ஏராளமானோர்மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து, அவருக்கு எதிரான அவதூறு வழக்குகள் உள்பட  கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது.

இதுதொடர்பான வழக்கு இன்று எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவதூறு வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து,  சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்திலின்படி, அவதூறு வழக்குகளை மாநில அரசு தனியாக வாபஸ் பெற முடியாது என்றும், அதுகுறித்து உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தி இருப்பதை வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, சிறப்பு நீதிமன்றம், ஸ்டாலின் மற்றும் மற்றவர்கள்மீதா அவதூறு வழக்குகளை திரும்ப பெற வேண்டுமானால்,   உயர்நீதிமன்ற ஒப்புதலை பெற்று வாருங்கள் என அறிவுறுத்தி உள்ளது.