சென்னை: அரசு வேலைகளுக்கான ஒப்பந்த டெண்டருக்கு சென்னை மாநகராட்சி 24மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியின் செயல் ஊழலுக்கு துணைபோவதாக இருப்பதாக ஒப்பந்ததார்கள் குற்றம் சாட்டி உள்ளர். மேலும் பல கவுசிலர்களும் மாநகராட்சி மேயரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அறப்போர் இயக்கமும் குற்றம் சாட்டி உள்ளது.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் பூங்கா புதுப்பித்தல் திட்டங்களுக்காக பல டெண்டர்களைக் கொண்டுள்ளது, சமீபத்தியது ஜூலை 31, 2025 அன்று முடிவடைகிறது. இந்த டெண்டர்கள் பழுதுபார்ப்பு, புதுப்பித்தல் மற்றும் புதிய வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பூங்கா மேம்பாட்டு பணிகளை உள்ளடக்கியது. இந்த டெண்டர் வெளியிடப்பட்டு 24மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி தரப்பில், கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம், நகரின் அனைத்து பூங்காக்களையும் பராமரிக்க ஒன்று அல்லது இரண்டு ஒப்பந்ததாரர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்து, அதற்காக ரூ.55 கோடியை ஒதுக்கியது. முன்னதாக, நமக்கு நாமே திட்டம், CSR நிதிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் மூலம் பூங்காக்களை பராமரிக்க முயற்சித்தது. 871 பூங்காக்களையும் பராமரிக்க ஒப்பந்ததாரர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து 2025 மார்ச் மாதம் பூங்காக்களில் நீர் சேமிப்பை அதிகரிக்கவும், வெள்ளப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும், கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜி.சி.சி) வட சென்னை சுற்றுப்புறங்களில் ஸ்பாஞ்ச் பூங்காக்களை உருவாக்க திட்டமிட்டு ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்க மாநில அரசு 88 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது பூங்காங்களை செப்பனிட டெண்டர்களை கோரியுள்ளது.
சென்னை மாநகராட்சி விதிமுறைகளை மீறிய, 14 சிறிய அளவிலான டெண்டர்களை வெளியிட்டு உள்ளது. இந்த டெண்டர்கள் குறித்து ஒப்பந்ததரார்கள் விண்ணப்பிக்க 24மணி நேரம் மட்மே நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது விவாதப்பொருளாகி உள்ளது. அதாவது புதன்கிழமை (ஜூலை 30ந்தேதி) பிற்பகல் 1.30 மணிக்கு டெண்டர்கள் வெளியிடப்பட்டு, அடுத்த நாள் (வியாழக்கிழமை – ஜூலை 31) பிற்பகல் 3 மணிக்குள் ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி கூறியிருப்பது கட்சி பேதமிறி அனைத்து வகையான ஒப்பந்ததார்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சி தனது ஆதரவாளர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கும் வகையில் முறைகேடாக இந்த டெண்டரை வெளியிட்டு உள்ளதாகவும், இந்த அதிவேக காலக்கெடு, டெண்டர் விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயல் என ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சியிரும் குற்றம் சாட்டி உள்ளனர். இது மாரும் ஊழல் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்கா சீரமைப்பு, வகுப்பறை கட்டுமானம், சாலை புனரமைப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குழாய்கள் பொருத்துதல் போன்ற பணிகளுக்கான விதிமுறைகளை மீறி, 14 சிறிய அளவிலான டெண்டர்களை வெளியிட்டு உள்ளதுட, அதற்கு 24 மணிநேர அவகாசம் மட்டுமே வழங்கி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த டெண்டர்களின் மொத்த மதிப்பு ₹1 கோடிக்கும் மேல் எனத் தெரிகிறது. அதே வேளையில், இணையதளத்தில் மாநகராட்சி வெளியிட்டுள்ள மற்ற டெண்டர்களுக்கு 15 முதல் 20 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 24 மணிநேர அவகாசம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தமிழக அரசின் டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள் 2000-இன்படி, ஒப்பந்ததாரர்கள் டெண்டர்களைப் பார்வையிட்டு விண்ணப்பிக்க குறைந்தது 21 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட வேண்டும். குறுகிய கால டெண்டர்கள் கூட குறைந்தபட்சம் 15 நாட்களுக்குத் திறந்திருக்க வேண்டும்.
ஆனால், சென்னை மாநகராட்சி விதிகளை மீறி புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு இந்த டெண்டர்களை அறிவித்து, அடுத்த நாள் பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவகாசம் அளித்திருக்கிறது. அதாவது, டெண்டர்கள் விடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே அவை திறக்கப்படவும் திட்டமிடப்பட்டிருந்தது ஊழல் செய்வதற்கான திட்டம் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
இதுகுறித்து தனது மனக்குமுறலை கூறிய சென்னை ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ஆர். ராமாராவ், “எந்த ஒரு டெண்டருக்கும் 15 நாட்கள் அவகாசம் என்பது கட்டாயம். 24 மணிநேரத்திற்குள் ஏன் இதை மூடுகிறார்கள் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட டெண்டராகத் தெரிகிறது. இது போன்ற குறுகிய கால டெண்டர்களுக்கு எதிராக நான் ஏற்கனவே நீதிமன்ற வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளேன். மாநகராட்சி டெண்டர்களில் நியாயமான போட்டியை உறுதி செய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த எம். ராதாகிருஷ்ணன், 2022-ஆம் ஆண்டில் மணலியில் சாலைகள் அமைப்பதற்கான இதே போன்ற குறுகிய கால டெண்டர் முறைகேட்டை சுட்டிக்காட்டினார். “மாநகராட்சி ஆகஸ்ட் 2022-இல் பணியை முடித்துவிட்டு, அக்டோபரில் அதே பணிக்கான பெயரளவு டெண்டரை வெளியிட்டதை நாங்கள் தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் ஒம்புட்ஸ்மேன் முன் நிரூபித்தோம். ஆனாலும், எந்த FIR-ம் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதிகாரிகள் இதை மீண்டும் செய்திருக்க மாட்டார்கள்,” என்றார் அவர்.
24 மணிநேரத்திற்குள் 2-3 பேர் கூட டெண்டரில் பங்கேற்க வாய்ப்பில்ல, மாநகராட்சி வழக்கமான டெண்டர் விதிமுறைகளை மீறக்கூடாது. “இந்த ஆண்டு மெரினா கடற்கரையில் பேட்டரி வாகனங்கள் (BOV) கொள்முதல் செய்யப்பட்டதிலும் கூட, ஒரு வரையறுக்கப்பட்ட டெண்டரைத்தான் வெளியிட்டனர். தனிப்பட்ட டெண்டர்களின் மதிப்பு குறைவாக இருக்கலாம், ஆனால் 15 மண்டலங்களிலும் உள்ள இத்தகைய டெண்டர்களைப் பெருக்கும்போது பல கோடி ரூபாயாக இது மாறும்” என்று ராதாகிருஷ்ணன் மேலும் கூறினார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன் திமுக அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறுவதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது என்பதால், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாக துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Thanks: Times of India
2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் 4 புதிய பூங்காக்கள்! அமைச்சர் நேரு