மும்பை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஊழல் இல்லாத பதவிக்காலம் குறித்து வாக்குறுதியளித்தார். ஒரு கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தியதைப் போலவே உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பை இயக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

“நம்பகத்தன்மை மற்றும் ஊழலற்ற தன்மையில் இந்திய அணியில் இருந்தது போலவே பி.சி.சி.ஐ.க்கும் எந்த சமரசமும் இல்லை” என்று கங்குலி தனது பொதுக்குழு கூட்டத்தில் பி.சி.சி.ஐ தலைவராக முறையாக பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களில் உரையாற்றியபோது கூறினார். 47 வயதான இவர், பிசிசிஐ யின் 39 வது தலைவராக போட்டியின்றி தேர்ந்தக்கெடுக்கப் பட்டார். ஒன்பது மாத காலத்திற்கு அவர் இப்பதவியில் நீட்டிப்பார்.

பிசிசிஐ யின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின், தனது முன்னுரிமைகளை முன்வைத்து, தற்போதைய கேப்டன் விராட் கோலியுடன் வியாழக்கிழமை பேசுவேன் என்று கங்குலி கூறினார்.

கோஹ்லியுடன் பேசுவாரா என்ற கேள்விக்கு, “இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான மனிதர் விராட் கோலி, நாங்கள் அவர் சொல்வதைக் கேட்போம். பரஸ்பர மரியாதை இருக்கும், கருத்துக்களும் இருக்கும், அவருக்கு எல்லா விதத்திலும் ஆதரவு தருவோம்”, என கங்குலி பதிலளித்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியதிலிருந்து ஓய்வில் இருக்கும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலத்தைப் பற்றிய யூகங்கள் குறித்து கேட்கப்பட்டது. “சாம்பியன்கள் அவ்வளவு விரைவாக முடிவுக்கு வரமாட்டார்கள். நான் இங்கு இருக்கும் வரை எல்லோரும் மதிக்கப்படுவார்கள், ” என்றார் கங்குலி.

பி.சி.சி.ஐ.யின் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இந்திய கிரிக்கெட்டுக்கு தலைமை தாங்கும் பணி கங்குலிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது, இது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் (கோஏ) சர்ச்சைக்குரிய 33 மாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கங்குலியின் நியமனம் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. அவர் 2017 முதல் வாரியத்தின் இடைக்காலத் தலைவராக இருந்த சி.கே.கன்னாவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

”இந்த பொறுப்பை ஏற்கும்படி என்னிடம் கேட்கப்பட்டிருப்பது ஒரு கவுரமாகக் கருதுகிறேன். இது பி.சி.சி.ஐ.க்கு ஒரு புதிய தொடக்கமாகும், ”என்றார் கங்குலி. “நான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கிறேன், அது ஒரு சவாலாகவும் இருக்கிறது, “” என்று அவர் கூறினார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் மஹிம் வர்மா புதிய துணைத் தலைவரானார். முன்னாள் பிசிசிஐ தலைவரும், தற்போதைய இளைய நிதி அமைச்சருமான அனுராக் தாகூரின் தம்பி அருண் துமால் பொருளாளராகவும், கேரளாவின் ஜெயேஷ் ஜார்ஜ் இணை செயலாளராகவும் இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிக நேர்த்தியான இடது கை வீரர்களில் ஒருவரான கங்குலி செயலாளராகவும் பின்னர் வங்க கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவராகவும் பெற்ற தனது அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் ஒரு சில இலக்குகளை நிர்ணயித்துள்ளார், அதில் முதன்மையானது, முதல் தர கிரிக்கெட்டை மறுசீரமைப்பதுடன், நிர்வாகத்தை மீண்டும் ஒரு வடிவத்திற்குக் கொண்டு வருவதோடு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தாழ்வாரங்களில் இந்தியாவின் மரியாதைக்குரிய நிலையை மீண்டும் பெற்றுத் தருவார் என உறுதியாக நம்பப் படுகிறது.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) மற்றும் தேசிய தேர்வுக் குழுக்களைப் பொருத்தவரை கருத்து மோதல் நிலவும் சூழலில், தரமான கிரிக்கெட் வீரர்களை அணியில் பெறுவதற்கான சவாலை கங்குலி எதிர்கொள்வார் என்று கூறப்படுகிறது.

மூத்த ஆட்டக்காரர் மகேந்திரசிங் தோனியின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம், பகல் / இரவு டெஸ்ட் கிரிக்கெட், நிரந்தர டெஸ்ட் மையங்கள் ஆகியவற்றைப் பற்றிய கங்குலியின் நிலைப்பாடும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிதாக அமைக்கப்பட்ட பணிக்குழுவிலிருந்து இந்தியாவை வெளியேற்றிய ஒரு காலகட்டத்தில் அவரது பதவிக்காலம் தொடங்குகிறது, இது ஐ.சி.சி யின் வருவாயில் நாட்டிற்கான பங்கை பாதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.