ஆப்பிள் ஐபோன் சாதனங்கள் மூலம் தூதரக அதிகாரிகளை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உளவு பார்ப்பதாக ரஷ்யாவின் FSB தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஐபோன்களில் உளவு மென்பொருள் மற்றும் மால்வேர் மூலம் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை ரஷ்ய உளவுத்துறை FSB கண்டுபிடித்துள்ளது.

“ரஷ்ய தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிசெய்யும் போது, ஆப்பிள் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட முரண்பாடுகள் அடையாளம் காணப்பட்டன, மேலும் அவை உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட மென்பொருள் பாதிப்புகளைப் பயன்படுத்தும் முன்னர் அறியப்படாத தீங்கிழைக்கும் மென்பொருளின் செயல்பாட்டால் ஏற்படுகின்றன” என்று கூறப்படுகிறது.

ரஷ்யர்கள் மட்டுமன்றி நேட்டோ நாடுகள், முன்னாள் சோவியத் குடியரசுகள் மற்றும் இஸ்ரேல், சிரியா மற்றும் சீனா உட்பட தூதரக பணிகளுக்காக ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

FSB இன் கூற்றுப்படி, ஆப்பிள் மற்றும் அமெரிக்க உளவுத்துறை, குறிப்பாக தேசிய பாதுகாப்பு நிறுவனத்திற்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பதாகவும் “ஐபோன் பயனர்களின் தனியுரிமைக் கொள்கை அந்நிறுவனத்தால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை விரும்பும் எந்தவொரு நபரையும் கட்டுப்படுத்த தேவையான ஒத்துழைப்பை அமெரிக்க உளவுத்துறைக்கு ஆப்பிள் நிறுவனம் வழங்கிவருவதாக ரஷ்ய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.