சென்னை

நாளை முதல் சென்னை சென்டிரல் மற்றும் அரக்கோணம் இடையே ஆன மின்சார ரயில் சேவை பகுதி நேர ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னை சென்டிரலில் இருந்து 12-ம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி காலை 9. 10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து 12-ம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி காலை 11.15 மற்றும் மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரயில் அரக்கோணம் – திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

வேலூரில் இருந்து 12-ம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் சித்தேரி – அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து 12-ம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரயில் சென்னை சென்டிரல் – திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது”

என்று கூறப்பட்டுள்ளது.