சென்னை

ன்று மதியம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலை இன்று  பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு, மறுகூட்டல்  அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நாளை பிற்பகல் 1 மணி முதல் வருகிற 1-ந் தேதி மாலை 5 மணி வரை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.”

என்று கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]