சென்னை

ன்று முதல் சென்னையில் கூடுதல் பெட்டிகள் கொண்ட  ஏசி புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.\

கடந்த ஏப்ரல் 19 முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் குறித்து ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பயணிகள் இடையே தெற்கு ரயில்வே கருத்துக்கணிப்பு கேட்டது.

கருத்து கேட்பு அடிப்படையில் அலுவலக வேலை நேரத்தில் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகளை இயக்குமாறு பல்வேறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் அலுவல் மற்றும் கல்வி நேரம் ஏற்றார்போல் கூடுதலாக ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில் சேவைகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதை ஏற்று தெற்கு ரயில்வே பயணிகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு அலுவலக வேலை நேரத்தில் கூடுதலாக ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவித்தது. தற்போது கூடுதல் பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயிலின் திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

புதிய அட்டவணை விவரங்கள் :

  1. காலை 6.50 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு காலை 7.35 மணிக்கு சென்றடையும்.
  2. காலை 7.50 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 9.25 மணிக்கு சென்றடையும்.
  3. காலை 9.41 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 10.36 மணிக்கு சென்றடையும்.
  4. மதியம் 1 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.
  5. மதியம் 2.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.
  6. மாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடையும்.
  7. மாலை 6.17 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இரவு 7.50 மணிக்கு சென்றடையும்.
  8. இரவு 8.10 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு இரவு 8.50 மணிக்கு வந்தடையும்

இன்று முதல் இந்த புதிய அட்டவணை பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  இந்த ரயில்  சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு – சென்னை கோட்டை – சென்னை பூங்கா – எழும்பூர் – மாம்பலம் – கிண்டி – செண்ட் தாமஸ் மவுண்ட் – திரிசூலம் – தாம்பரம் – பெருங்களத்தூர் – கூடுவாஞ்சேரி – பொத்தேரி – சிங்கப்பெருமாள் கோயில் – பரனூர் – செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் தான் ரயில்கள் நின்று செல்லும்.

இன்று முதல் 19 ஆம் தேதி வரை திருசூலத்தில் தற்காலிகமாக ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில்கள் நிற்காது எனவும், மே 20 முதல் அனைத்து ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் திருசூலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் எனவும் அதே நேரத்தில் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயிலுக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.