திருப்பதி

ரும் 20 ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வரும் 20 ஆம் தேதியில் இருந்து பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

இந்த தெப்ப உற்சவம் தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவாரி புஷ்கரணியைச் சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தெப்ப உற்சவம் நடைபெறும் இந்த 5 நாள்களில் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.