புதுடெல்லி:
டந்த சில மாதங்களாக இலவச ரேஷன் திட்டம் மத்திய அரசு அமல்படுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் போது நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.