சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஏழை எளிய மக்கள் பண்டிகையை கொண்டாடும் வகையில், இலவச வேட்டி, சேலைகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு  ஒரு மாதம் முன்பில் இருந்து  ரேசன் கடைகளில் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அண்டு வேட்டை சேலை வழங்குவதில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. பல பகுதிகளில் பலருக்கு வேட்டி கிடைத்தால், சேலை கிடைக்காத  நிலையும், சிலருக்கு சேலை கிடைத்தால், வேட்டி கிடைக்காத நிலையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ரேசன் கடைகளில் வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிலையில், இந்த அண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு  மாதங்களுக்கு முன்பே இலவச வேட்டி சேலைகளை ரேன் கடைகளில் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.  அதன்படி,  பொங்கல் பண்டிகை பரிசு; நவ.15 முதல் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும், என  செய்தியாளர்களின் சந்திப்பின்போது,  தமிழக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர்.காந்தி  தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில், முருகன் கூட்டுறவு சங்கம், புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் திறப்பு விழா,  நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி  பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி முதல் வியாபாரத்தைத் துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, “திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுகள்தான் உண்மையான பட்டு, அதனை தாங்கள் உத்திரவாதத்துடன் விற்பனை செய்கின்றனர். தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது.

எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.  தி.மு.க. ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது, குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ரூ800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நெசவாளர்களுக்கு ரூ800 முதல் ரூ1500 வரை கூலி கிடைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ரூ9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.

மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றவர், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் கட்டி மகிழ்கின்றனர்.  இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி சேலைகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்