சென்னை:

மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு சர்ச்சையில் சிக்கிய சாமியார் சந்திராசாமி காலமானார்.

அந்நிய செலவாணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் இவர் சிக்கியவர். ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், சந்திராசாமியிடம் விசாரிக்க பரிந்துரைத்தது.

இந்நிலையில், சந்திராசாமி இன்று மரணமடைந்துள்ளார். இவரும் பாஜக ராஜ்யசபா எம்.பியுமான சுப்ரமணியன் சாமியும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.