டெல்லி: தலைநகரில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் செக்ஸ் நடிகை மியாக கலிஃபா, இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பகுதியில், இயைதள சேவை  முடக்கம் செய்யப்பட்டுள்ளதற்கும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வடமாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 71வது நாளாக நீடிக்கிறது.  விவசாயகிளின் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா உள்படபல நாடுகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு

பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்திவரும் சூற்றுச்சூழல் ஆர்வலமான சிறுமி கிரேட்டா தன்பெர்க் மற்றும் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில், முன்னாள் பிரபல செக்ஸ்பட நடிகை  மியா கலீஃபாவும் இணைந்துள்ளார்.

விவசாயிளின் போராட்டம் குறித்து, அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்தியாவில் மனித உரிமை மீறல் நடப்பதாகக் குற்றஞ்சாட்டும் அவர், விவசாயிகளுக்கு ஆதரவாக நான் நிற்பேன் என்று குரல் எழுப்பியிருக்கிறார்.

மற்றொரு டிவிட்டில், “விவசாயிகள் காசுக்காக நடிக்கிறார்களா? அவர்கள் சிறந்த இயக்குநர்கள் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, விருதுகள் பருவத்தில் அவர்கள் கவனிக்கப்படுவதில்லை என நம்புகிறேன், நான் விவசாயிகளுடன் நிற்கிறேன்” என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கிளாடியா வெபேவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் ஆசிரியரும் மருமகளுமான மீனா, கிளர்ச்சியடைந்த விவசாயிகளுக்கும் சமூக ஊடகங்களில் தனது ஆதரவைக் காட்டினார்.  “உலகின் பழமையான ஜனநாயகம் ஒரு மாதத்திற்கு முன்பு கூட தாக்கப்படவில்லை என்பது தற்செயல் நிகழ்வு அல்ல, நாங்கள் பேசும்போது, ​​அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.”

“இது தொடர்பானது. இந்தியாவின் இணைய முடக்கம் மற்றும் உழவர் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான துணை ராணுவ வன்முறை ஆகியவற்றால் நாங்கள் அனைவரும் கோபப்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.  “போர்க்குணமிக்க தேசியவாதம் அமெரிக்க அரசியலில் இந்தியாவில் அல்லது வேறு எந்த இடத்திலும் இருப்பதைப் போலவே சக்தி வாய்ந்தது. ஃபாசிஸ்ட் டிக்டேட்டர்கள் எங்கும் செல்லவில்லை என்ற யதார்த்தத்தை மக்கள் எழுப்பினால் மட்டுமே அதை நிறுத்த முடியும்.”

அமெரிக்க மாளிகை பிரதிநிதி ஜிம் கோஸ்டாவும் நடந்து வரும் அமைதியின்மை தொந்தரவாக இருப்பதாகவும், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதற்கிடையில், அரியானா அரசு பிப்ரவரி 3 ம் தேதி மாலை 5 மணி வரை மாநிலத்தின் பல மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.