சென்னை: திமுக விழுப்புரம் தெற்கு மற்றும் வடக்கு  மாவட்ட பொறுப்பாளர்களை மாற்றம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் அறிவித்து உள்ளார்.  முன்னாள் எம்பியும் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம்சிகாமணிக்கு  விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், விழுப்புரத்தில் நடைபெற்ற இப்ஃதார் தோன்பு திறப்பு விழாவில் அமைச்சர்கள் பொன்முடிக்கும், செஞ்சி மஸ்தானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளதுடன், விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்து வரும் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக  டாக்டர் ப.சேகர் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

அதுபோல துரைமுருகன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில்,  விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கௌதம சிகாமணியை நியமனம் செய்து அறிவித்து உள்ளார். ஏற்கனவே இருந்த நாக புகழேந்தி  மறைவெய்திய நிலையில், அந்த இடத்திற்கு கவுதம சிகாமணி நியமிக்கப்பட்டு உள்ளார்.  அவருடன் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

செஞ்சி மஸ்தானை அவமதித்த அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம்! இடிமுரசு இஸ்மாயில்