கிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. முப்பதாண்டு களுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைக் கைப்பற்றிய மோர்சியால் ஓராண்டுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியவில்லை.

கடந்த 2013ல் அதிபர் மாளிகைக்கு வெளியே தீவிரமான மோதலில் ஈடுபட்ட காரணத்திற்காக எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி, மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது

இதைத்தொடர்ந்து பதவி பறிக்கப்பட்ட இஸ்லாமியவாத தலைவரான மோர்சிக்கு எதிராக அரசு ரகசியங்களை கத்தார் நாட்டிற்கு தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வழக்கில்  20 ஆண்டு சிறை தண்டனையை வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெர்சி காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.