கீவ்: ரஷ்யாவின் தாக்குதலில் சேதமடைந்துள்ள உக்ரைனில், பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் சுற்றுப்பயணம் செய்து  போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேட்டோ விவகாரத்தில் உக்ரைனக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் மூண்டு 8 மாதங்களை கடந்துள்ளது.  இருந்தாலும், இரு தரப்பும் போரை கைவிட மறுத்து வருகின்றனர். இந்த போரினால் ரஷ்யாவுக்கு கடும் உயிர்சேதம் ஏற்பட்டாலும், உக்ரைனின் முக்கிய பகுதிகளை தரைமட்டமாக்குவதில் ரஷியா அதிபர் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், தலைநகர் கீவிற்குச் சென்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை சந்தித்தார். அப்போது, போரின் பாதிப்புகள் குறித்து செலன்ஸ்கியிடம் போரிஸ் ஜான்சன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் உக்ரைன் வருகைக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்தபோதும், பதவிக்காலம் முடிந்தபிறகும் உக்ரைனுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் பற்றிய குழு விவாதத்தில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.