பெய்ஜிங்: கல்வான் மோதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பலியானதாக சீன ராணுவம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினரிடையே 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி மோதல் ஏற்பட்டது. மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதேபோல, சீனா தரப்பில் 35 பேர் பலியானதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.

ஆனால், சீனத் தரப்பில் உயிரிழப்பு பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந் நிலையில், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான குளோபல் டைம்ஸில் இன்று  வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 5 பேர் வீரமரணம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென் ஹோங்ஜுன், ஸியான்க்ராங், ஸியோ சியுவான், வாங் ஜூரோன் உள்ளிட்ட 5 பேரும் இறுதிமூச்சு வரை போராடி இறந்தனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன ராணுவம் இதுபோன்று ஒப்புக்கொண்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.