தென்காசி
மேற்கு தொடர்ச்சி மலையில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர்,

நேற்று தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே உள்ள வெள்ளக்கால் தேரி பீட் பகுதியில் காட்டுத்தீ பரவியது. இந்த தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் தீ தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பரவியதால் வனத்துறையினருக்கு தீயை அணைப்பது பெரும் சவாலானதாக மாறியதால் வனத்துறையினர் தீயை அணைக்க திணறி வருகின்றனர்.
இன்று இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel