சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,  கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து,  கிருஷ்ணராஜ சாகர் உள்பட சில அணைகிளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து  திறந்துவிடும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால்,   தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று (அக்டோபர் 10ந்தேதி)  மாலை வரை காவிரியில் வெறும் எட்டாயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு 9 மணியளவில் 30 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இன்று காலை மேலும் அதிகரித்து விநாடிக்கு 68 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக காவிரியில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.