துரை

திருவனந்தபுரத்துக்கு சென்றுக் கொண்டிருந்த மேற்கு வங்க ஆளுநர் பயணம் செய்த விமானம் அவசரமாக மதுரையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்று பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் மேற்குவங்காள ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் உட்பட 172 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த விமானம்  திருவனந்தபுரத்தில் தரையிரங்காமல் மதுரை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்கு எரியாததால் மதுரை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.