சென்னை

சென்னையில் இருந்து பிரிட்டனுக்கு நேரடி விமானச் சேவை வரும் ஆகஸ்ட் 31 முதல் தொடங்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக உலகெங்கும் உள்ள பல நாடுகள் வெளிநாட்டுப் பயணிகள் வரவும் வெளிநாடுகளுக்குச் செல்லவும் தடை விதித்தன.   இதில் ஒன்றாக இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்வதற்கு மற்றும் பிரிட்டனில் இருந்து இந்தியா வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதையொட்டி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவுக்கான சேவைகளை ரத்து செய்தது.   தற்போது பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கொரோனா  பாதிப்பு பெருமளவு குறைந்து வருகிறது.  இதையொட்டி பிரிட்டன் நாட்டில் இந்தியர்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 31 முதல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குத் தனது முதல் விமானச் சேவையை மீண்டும் தொடங்குகிறது.  இந்த முதல் விமானம் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று சென்னையை அடைய உள்ளது.

பிறகு லண்டனில் இருந்து ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்தும் விமானச் சேவை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.