சென்னை

நேற்று சென்னையில் பெய்த திடீர் மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதி அடைந்துள்ளனர்,

நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதியில், திடீரென பலத்த கனமழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. 12 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.  மேலும் தரையிரங்க முடியாத இரு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் திருப்பதிக்கும், கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கும் திருப்பி விடப்பட்டது.

நேற்று பெய்த திடீர் மழை காரணமாக சென்னையில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.