சென்னை:
தடைகாலம் எதிரொலியால் மீன்களின் விலை கிடுகிடு அதிகரித்துள்ளது.

மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் ஆண்டு தோறும் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கியது. ஜூன் 14-ந் தேதி வரையிலான கால அளவில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீன்களின் விலை கிடுகிடு அதிகரித்துள்ளது. சென்னை காசிமேட்டில் வஞ்சிரம் கிலோ ரூ.800ல் இருந்து ரூ.1200 ஆகவும், இறால் ரூ.400ல் இருந்து ரூ.650 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel