டில்லி

ஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுகிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் அணியில் டில்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.   இவரது யார்க்கர் பந்து வீச்சு மிகவும் புகழ் பெற்றதாகும்.   இவரது சொந்த ஊர் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பட்டி ஆகும்.  இவர் வயல் வெளியில் தனது கிரிக்கெட் ஆட்டத்தைத் தொடங்கி தற்போது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினக்கூலி தொழிலாளர்களைப் பெற்றோராகக் கொண்ட இவர் தனது கிரிக்கெட் ஊதியத்தின் மூலம் தனது குடும்பத்துக்காக கான்கிரீட் வீடு ஒன்றைக் கட்டி உள்ளார். அவர் தனது ஊரில் கிரிக்கெட் கனவோடு உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 2017 ஆம் வருடம் கிரிக்கெட் பயிற்சி நிறுவனம் ஒன்றை நிறுவி பலருக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.

தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரவேற்பு அளிக்கும் காட்சி பிசிசிஐ யால் வெளியிடப்பட்டு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.  இந்த சேலம் மாவட்ட இளைஞருக்கு வாழ்த்து அளிப்பதில் பத்திரிகை.காம் பெருமை கொள்கிறது.

[youtube https://www.youtube.com/watch?v=peujlDYxxpk]