குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயப்படுத்தியதன் மூலம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. இதனால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

CHINA

உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. இது சுமார் 140 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ளது. அளவுக்கு அதிகமாக மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போனதை தொடர்ந்து, ‘ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை’ என்ற குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை சீன அரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் கடந்த 1979ம் ஆண்டு முதல் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேல் குழந்தைகளை பெற்றுக் கொண்டால் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கட்டாய கருக்கலைப்பும் செய்யப்பட்டது. இதன் காரணமாக சீன மக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்வதை நிறுத்திக் கொண்டனர். இதனால் சீனாவில் வழக்கத்தை விட மக்கள் தொகை பெருக்கம் கணிசமாக குறைந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில் தேசிய அளவில் ஆண்டுக்கு ஆண்டு 25 லட்சம் என்ற அளவில் மக்கள் தொகை குறைந்தது தெரியவந்துள்ளது.

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தியதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் யி புஸியான் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

ஆய்வில் “ 2018-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் இறப்பு விகிதம் 1 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரம் ஆக இருந்தது. அதே நேரத்தில் பிறப்பு விகிதம் 12 லட்சத்து 70 ஆயிரமாக மிகவும் குறைந்து விட்டது. இது போன்ற அதிகமாக மக்கள் தொகை குறைந்து வருவது சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். ஏனெனில் மக்கள் தொகை குறைவதன் மூலம் மனித உழைப்பும் குறையும்.

மேலும், முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பென்சன் மற்றும் சுகாதார மேம்பாடு போன்றவற்றின் தேவையும் அதிகரிக்கும் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் நடுத்தர வயது கொண்ட பெண்களின் எண்ணிக்கை 3.9 கோடி என்ற அளவில் குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீனாவின் மக்கள் 2 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது.

இருப்பினும் அதன் மக்கள் தொகை கணிசமாக அளவிலேயே உள்ளன. தற்போது சீனாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகை 138 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.