சென்ன‍ை: வெற்றிக்கு கடைசி நாளில் 381 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், வெறும் 120 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து மூழ்கி வருகிறது இந்திய அணி.

நேற்றைய நிலவரப்படி, 39 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்த இந்திய அணி, இன்று ஆட்டத்தை தொடர்ந்தது. ஆனால், இன்று எல்லாமே அப்படியே தலைகீழாக மாறியது. ஷப்மன் கில் மட்டுமே 50 ரன்கள் அடித்தார்.

இந்திய அணியின் சுவர் புஜாரா 15 ரன்களுக்கு வெளியேற, ரஹானே இம்முறையும் வெறுப்பேற்றி டக்அவுட் ஆனார். கடந்த இன்னிங்ஸில் பயமுறுத்திய ரிஷப் பன்ட் இம்முறை 11 ரன்களுக்கு தனது கணக்கை முடித்துக்கொண்டார். கடந்தமுறை இறுதிவரை களத்தில் நின்று மிரட்டிய வாஷிங்டன் சுந்தர் இம்முறை டக்அவுட்.

தற்போது, விராத் கோலியும், அஸ்வினும் களத்தில் உள்ளனர். விராத் கோலி 27 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். அஸ்வின் 1 ரன் எடுத்து தனது கணக்கைத் தொடங்கியுள்ளார்.

இங்கிலாந்து தரப்பில், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 3 விக்கெட்டுகளும், ஜேக் லீச்சுக்கு 2 விக்கெட்டுகளும், டாம் பெஸ்ஸுக்கு 1 விக்கெட்டும் கிடைத்துள்ளன.